Skip to playerSkip to main content
  • 6 minutes ago
சென்னை: ஆவடியில் சர்வதேச குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் ரத்ததானம் செய்து அதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.உலகம் முழுவதும் ஜூன் 14ஆம் தேதி அன்று சர்வதேச குருதி கொடையாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆவடியில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப் (CRPF) வளாகத்தில், சி.ஆர்.பி.எப் மருத்துவ பிரிவு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மருத்துவ பிரிவு டி.ஐ.ஜி சுமதி பாலு, ஆவடி சி.ஆர்.பி.எப் டி.ஐ.ஜி ஆனந்த் ஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.இதனை தொடர்ந்து சி.ஆர்.பி.எப் உயரதிகாரிகள், வீரர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் குருதி கொடை வழங்க பதிவுசெய்து வரிசையில் காத்திருந்து ரத்ததானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் அனைவரும் ரத்த தானம் வழங்க முன்வர வேண்டும், ரத்த தானம் செய்வதன் மூலம் நமக்கு மட்டுமல்லாது பிறருக்கும் நலன் பயக்கும் எனவும் ரத்ததானத்தின் மூலம் பிறரின் உயிரை காக்க முடியும் எனவும் எடுத்துரைத்தனர்.

Category

🗞
News
Comments

Recommended