Skip to playerSkip to main content
  • 6 hours ago
திண்டுக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினரோடு கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வெடுக்க சென்றுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசியல் தலைவர் ஓய்வெடுக்க பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கள் குடும்பத்தினருடன் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார். அதற்காக இன்று (ஏப்ரல் 25) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் சென்றடைந்தார். முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் வருகையொட்டி சாலையெங்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையால் கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் இன்று முதல் ட்ரோன்கள் மற்றும் தனி விமானங்கள் பறக்க மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொடைக்கானல் நகர் பகுதி முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Category

🗞
News
Transcript
00:00Oh
00:30and
00:30close
00:33forward
00:34Fill
00:37forward
00:38open
00:39President
00:40right
00:40Martin
00:47I'm not
00:48I'm not
00:49Stalin will let
00:49Stalin will let
00:50Stalin will let
00:51I'm not
00:53I'm not
00:58Defender
01:00Defender
01:01Yeah
01:01Yeah
Comments

Recommended