Skip to playerSkip to main content
  • 21 hours ago
தஞ்சாவூர்: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலையில் இருந்து அமலுக்கு வந்த நிலையில், கும்பகோணம் மாநகரில் உள்ள பல தலைவர்கள் சிலை இன்னும் மறைக்கப்படாமல் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால் தமிழகம் முழுவதும் கட்சி கொடிகள், சின்னங்கள், பேனர்கள், தலைவர்கள் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டு தலைவர்களுடைய சிலைகள் துணிகள் கொண்டு மறைக்கப்பட்டும் வருகின்றன. ஆனால், கும்பகோணம் மாநகர் தாராசுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகள், கும்பேஸ்வரன் கோயில் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, உச்சிப் பிள்ளையார் கோயில் சந்திப்பில் உள்ள மூப்பனார் சிலை ஆகியவை மறைக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகி பல மணி நேரத்திற்குப் பிறகும் கூட, கும்பகோணம் மாநகரின் பல பகுதிகளில் இது போன்று தலைவர்கள் சிலைகள் மறைக்கப்படாமல் உள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
Comments

Recommended