Skip to playerSkip to main content
  • 6 days ago
தருமபுரி: கோடை விடுமுறை எதிரொலியாக ஒகேனக்கலில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இன்று குவிந்தனர்.தருமபுரி மாவட்டம் பென்னாகதரத்தை அடுத்து ஒகேனக்கல் அமைந்துள்ளது. இது தமிழகத்தின் முக்கிய சுற்றிலா தலமாக உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர், தமிழ்நாட்டிற்கு வரும் முதல் பகுதியாக இந்த பிலிகுன்டுலு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.இங்கு குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குளிபதற்கு குவிந்து வருகின்றனர். மேலும், அங்கு சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்தும், மீன் உணவை சுவைத்தும், பரிசல் பயணம் மேற்கொண்டு சுற்றுலாவை இனிமையாக கொண்டாடி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Category

🗞
News
Transcript
00:24Thank you for listening.
00:41Thank you for listening.
01:15Thank you for listening.
Comments

Recommended