தஞ்சாவூர்: குழந்தைகளுக்கு பலூன் வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்த கும்பகோணம் சுயேட்சை வேட்பாளரின் செயல் பொதுமக்களை கவரும் விதமாக இருந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் 171 கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் க.அறிவழகன் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். அவருக்கு பலூன் சின்ன ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நேற்று (ஏப்.18) இரவு கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு அறிவழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பூங்காவிற்கு விளையாட வருகை தந்த குழந்தைகளுக்கு தனது சின்னமான பலூன்களை வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.தொடர்ந்து பரப்புரையில் பேசிய அவர், “என்னை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்தால், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைய பாடுபடுவேன். இதன்மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி ஆகிய வசதிகள் கும்பகோணத்திலேயே கிடைக்கும். குழந்தைகள் பொழுது போக்கிற்காக 20 ஏக்கரில் உயிரியியல் பூங்கா அமைப்பேன் என்றும் வாக்குறுதிகள் அளித்தார்.
Comments