Skip to playerSkip to main content
  • 2 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கி வரும் நிலையில், இங்கு தினம்தோறும் பிரபலங்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இன்று வருகை தந்தார். கோயில் முன்புள்ள கடலில் கால் நனைத்து கொண்ட ஓபிஎஸ், தலையில் தீர்த்தம் தெளித்துக் கொண்டார். தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற அவர் முருகன், வள்ளி, தெய்வானை, சண்முகர், பெருமாள், தெட்சிணாமூர்த்தி, சத்ருசம்ஹாரமூர்த்தி உள்பட பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்தார்.தொடர்ந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் பேட்டரி வாகனத்தில் ஏறிச் சென்றார். அதன் பின் கோயில் வளாகத்திற்கு உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். ஓ.பன்னீர்செல்வம் டீக்கடையில் நிற்பதை பார்த்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக செய்தியாளர்கள் பேசிய ஓபிஎஸ், ”உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டேன்” என கூறிவிட்டுச் சென்றார்.

Category

🗞
News
Transcript
00:00What are you doing my job?
00:01How am I doing?
00:02How am I doing?
00:04I'll have some work, you know,
00:07my shoes are in my face.
00:10There it is!
00:29There it is!
00:40The other one.
00:42Do you want to buy a dish?
00:44The dish is good.
00:46You are not good.
00:48Why should we put in the dish?
00:52The dish is good.
00:54It's good.
00:56It's good.
00:58It's good.
01:00It's good.
01:02It's good.
01:04I don't care.
Comments

Recommended