Skip to playerSkip to main content
  • 19 hours ago
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.அது மட்டுமல்ல, இந்த ஆலயம் கீழை நாடுகளின் "லூர்து நகர்" என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேயராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டுவிழா இன்று (ஜூலை 7) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து உத்திரிய மாதா உருவம் பொறித்த கொடி ஊராவலமானது கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அகஸ்டின் தலைமையில், கொடி புனிதம் செய்து ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது வாண வேடிக்கைகள் விண்ணை முட்டின. பின்னர் பங்குத்தந்தை தலைமையில் திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், நவநாட்களில் சிலுவை பாதை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

Category

🗞
News
Transcript
00:00No, no, no, no, no, no
00:58No, no, no, no, no
01:26No, no, no, no, no, no
01:41No, no, no, no, no, no
02:08No, no, no, no, no, no
02:29No, no, no, no, no, no
02:59No, no, no, no, no, no
03:17No, no, no, no, no
03:46No, no, no, no, no, no
04:16No, no, no, no, no, no
Comments

Recommended