Skip to playerSkip to main content
  • 10 hours ago
அரியலூர்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரியலூரில் திடீரென ஒட்டப்பட்டுள்ள என்.டி.ஏ Vs தமிழ்நாடு' என்ற சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அதிரடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் அரியலூரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ள குறியீடுகள் ஒருபுறம் காவி நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் என்.டி.ஏ என்ற வார்த்தை ஹிந்தி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.மறுபுறம் சிகப்பு நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் 'தமிழ்நாடு' என எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற வார்த்தையின் அருகிலேயே, கருப்பு நிறத்தில் 'உதயசூரியன்' சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளன. இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அரியலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News
Transcript
00:00I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry.
Comments

Recommended