Skip to playerSkip to main content
  • 1 week ago
திண்டுக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக கடந்த சனிக்கிழமையன்று கொடைக்கானல் வந்தடைந்தார். இந்நிலையில் இன்று (ஏப்.28) நட்சத்திர ஏரி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் நட்சத்திர ஏரி பகுதியில் 11 டிகிரி செக்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு நிலவும் குளுமையான கால நிலையை அனுபவித்து பனித்துளியை கண்டு ரசித்தவாறு, முதலமைச்சர் ஸ்டாலின் மூன்றாவது நாளாக நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது முதலமைச்சரை காண்பதற்கு அதிகாலையில் இருந்தே ஏராளமான கட்சி தொண்டர்கள், சுற்றுலாப் பயணிகள், மற்றும் பொதுமக்கள் ஏரி பகுதியில் காத்திருந்தனர். இதனையடுத்து முதலமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்து கொண்டபடியே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தனது நடைப்பயிற்சியை தொடர்ந்தார். அதனைத்தொடர்ந்து ஏரியை சுற்றி சைக்கிள் பயணம் மேற்கொண்டார். முதலமைச்சர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதை ஏரிச்சாலையில் இருந்த சுற்றுலாப் பயணிகள், மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்திற்கு பிறகு தற்போது ஓய்வெடுத்து வருகின்றனர்.

Category

🗞
News
Comments

Recommended