Skip to playerSkip to main content
  • 6 hours ago
சென்னை: இன்று முகூர்த்த தினம் என்பதால் மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் வந்து வாக்களிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறிய வண்ணம் உள்ளது. சென்னையிலும் இந்த மாதிரியான ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் வாக்கைச் செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. குறிப்பாக, இன்று முகூர்த்த தினம் என்பதால், திருமணம் ஆன கையோடு தம்பதிகள் வாக்குச்சாவடிகள் வந்து வாக்களிக்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 23) முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் நடைபெற்றது. அந்த மாதிரியான ஓர் சம்பவம் தற்போது சென்னையில் அரங்கேறியுள்ளது. மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவருக்கும், சரண்யா (29) என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் மணக்கோலத்தில் வந்து தங்களின் வாக்கினைச் செலுத்தினர். பின்னர், 'வாக்களித்தேன் பெருமிதம் கொண்டேன்' என்ற செல்ஃபி பூத்தில் நின்று அவர்கள் இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Category

🗞
News
Transcript
00:28Transcription by CastingWords
00:47Transcription by CastingWords
Comments

Recommended