Skip to playerSkip to main content
  • 6 hours ago
தஞ்சாவூர்: நாதக வேட்பாளர் கண்ணன் ஏர் கலப்பையை கையில் ஏந்தியபடி, பேண்ட் வாத்தியம் முழங்க மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் (நாதக) வேட்பாளராக பொறியாளர் கண்ணன் போட்டியிடவுள்ளார். அவர் நேற்று (மார்ச் 30) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.இதற்காக, பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் அருகிலிருந்து வேட்பாளர் கண்ணன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். பேண்ட் வாத்தியம் முழங்க வந்த அவர், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபடியே சென்றார். அவரைத் தொடர்ந்து பின்னால் ஒரு மாட்டு வண்டியிலும், இருசக்கர வாகனங்களிலும் ஏராளமான நாதகவினர், தங்களது கட்சி கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே 200 மீட்டருக்கு முன்பாக முடிவடைந்தது. பின்னர், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சங்கரிடம் தனது வேட்பு மனுவை கண்ணன் தாக்கல் செய்தார்.

Category

🗞
News
Comments

Recommended