Skip to playerSkip to main content
  • 4 hours ago
அரியலூர்: அரியலூரில் மக்கள் பயன்படுத்தி வரும் சாலையில் கழிவு நீரை திறந்து விடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தனிநபர் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் வகையில், அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்களின் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர், ஆங்காங்கே மக்கள் பயன்படுத்தி வரும் பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஆண்டிமடம் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் கழிவுநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கழிவுநீர் வாகன ஓட்டுநர் மற்றும் பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கழிவுநீர் வாகனம் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.இவ்வாறு சாலையின் ஓரங்களில் செப்டிக் டேங்க் கழிவுநீர் கொட்டப்படுவதால் சாலையை பயன்படுத்தக்கூடிய பலதரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வீடுகளில் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை அகன்றும் கழிவு நீர் வாகனங்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுவெளி இடத்தில் கழிவுநீரை திறந்து விடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Category

🗞
News
Comments

Recommended