தேனி: ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்குள் வந்த நகர பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் பள்ளி மாணவர்கள் பேருந்தை தள்ளிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.தேனியில் இருந்து ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட ஒரு சில கிராமங்கள் வழியாக ஆண்டிபட்டி செல்லும் அரசு பேருந்து நேற்று மாலை தேனியில் இருந்து புறப்பட்டு ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. பின் மீண்டும் ஆண்டிபட்டியில் இருந்து அந்த பேரு்து தேனி புறப்பட தயாராக இருந்தது. அப்போது பேருந்தின் இஞ்சின் பழுதாகி நின்றதால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்னே இருந்து சிறு தூரம் தள்ளி விட்டு பேருந்தை இயக்கும் நிலை ஏற்பட்டது. இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தேனியில் இயக்கப்படும் நகரப் பேருந்துகள் பெரும்பாலும் பராமரிப்பின்றி ஆங்காங்கே பழுதாகி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சீராக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments