Skip to playerSkip to main content
  • 2 hours ago
தஞ்சாவூர்: திமுகவைப் பொறுத்தவரை ஆட்சியை காப்பாற்றவே பார்க்கிறார்கள் தவிர மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என மத்திய சட்டம் மற்றும் நீதி துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக் வால் பேசினார்.தஞ்சாவூரில் புவிசார் குறியீடு பெற்ற சிறப்பு கைவினைக் கலைஞர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டு கைவினை கலைஞர்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "திமுகவைப் பொறுத்தவரை ஆட்சியை காப்பாற்றவே பார்க்கிறார்கள் தவிர மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளால் மாநில மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் இதன் விளைவாக கொலை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். மக்களைப் பற்றி மக்களின் நலனில் கவனம் செலுத்தும்," என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும் பேராவூரணி மீனவ சமூகத்தினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Category

🗞
News
Transcript
00:04Shiro
00:05It's good
00:08Shiro
00:09Shiro
00:09Shiro
00:10Shiro
00:24Shiro
Comments

Recommended