Skip to playerSkip to main content
  • 1 day ago
கோயம்புத்தூர்: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீண்டும் உலா வந்த தும்பிக்கை இல்லா யானைக்குட்டியின் வீடியோ காட்சியானது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.  கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த பகுதியானது வனப்பகுதியை ஒட்டி காணப்படுவதால் யானை, சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் இந்தப் பகுதியில் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானைக்குட்டி ஒன்று தும்பிக்கை இல்லாமல் சுற்றி வருவதைக் கண்டு வேதனை அடைந்த சுற்றுலாப் பயணிகளும், வன ஆர்வலர்களும் கேரள மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனத்துறையினர் இந்த யானைக்குட்டியின் நடமாட்டத்தைக் கண்காணித்து சிகிச்சை அளிக்க முன்வந்தனர்.  ஆனால் தாய் யானை தனது குட்டியை அந்தப் பகுதியிலிருந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்றுவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த குட்டி யானை யார் கண்ணிலும் படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் நேற்று அந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி தனது தாய் யானையுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்களும் வன ஆர்வலர்களும் கூறுகையில், “தும்பிக்கை இருந்தால் மட்டுமே யானைகளால் உணவை எடுக்கமுடியும். தற்போது இந்த குட்டி வளர்ந்து வரும் நிலையில் ஒரு சில நாட்களில் தாயைவிட்டு பிரிந்து செல்லும் நிலைமை உள்ளதால் இந்த யானையின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

Category

🗞
News
Transcript
00:12In the background of the town, the town of the church is a young man who is in the neighborhood
00:13of a city.
00:13The town of the church was a local city, and he was a local city, for every city of the
00:16church.
00:16The town of the church was a town of a city where the town of the church was a town
00:29of a city.
Comments

Recommended