Skip to playerSkip to main content
  • 2 weeks ago
சென்னை: அம்பத்தூரில் நள்ளிரவிலும் நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு பொதுமக்கள் பெட்ரோல் நிரப்பிச் சென்றனர்.ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி குறைந்ததால் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டது. இதனால், அம்பத்தூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிச் சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவு என பாராமல் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளில் வரிசை சாலை வரை நீண்டதால் போலீசார் பாதுகாப்புடன் பெட்ரோல் நிரப்பும் சூழல் ஏற்பட்டது. ஆனால், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே போல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

Category

🗞
News
Comments

Recommended