Skip to playerSkip to main content
  • 5 days ago
திருப்பத்தூர்: விவசாய நிலத்தில் புகுந்த யானை கூட்டம் வேலிகளை உடைத்து விளைநிலங்களை சேதப்படுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அபிகிரிப்பட்டறை பகுதியில், வனப்பகுதியையொட்டியுள்ள விளைநிலத்தில், நேற்று நள்ளிரவு புகுந்த 7 காட்டுயானைகள் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த வேலிகளை உடைத்து நெற்பயிர், தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இந்ச சம்பவம் குறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.     இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையினர், காட்டுயானையை பொதுமக்களுடன் சேர்ந்து, வனப்பகுதிக்கு விரட்டினர். ஏற்கனவே இதைப்போல் கடந்த சில தினங்களுக்கு முன் சுட்ட குண்டா பகுதியில் புகுந்த காட்டு யானை கூட்டம் தற்போது மீண்டும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. கோடை காலம் நெருங்கும் நிலையில் காட்டு யானைகள் உணவு தேடி நிலப்பகுதிக்கு வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Category

🗞
News
Transcript
00:07Music
Comments

Recommended