Skip to playerSkip to main content
  • 3 weeks ago
தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.குறிப்பாக, தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 27ஆம் தேதி தேரோட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பந்தக்கால் நடும் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.பந்தகாலுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்ட அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
00:32Thank you very much.
01:04Thank you very much.
Comments

Recommended