Skip to playerSkip to main content
  • 5 minutes ago
ஈரோடு: அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து குமாரபாளையம் ஊராட்சியை சுற்றியுள்ள கிராம மக்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளார்.சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் இருந்து சிவியார் பாளையத்துக்கு செல்லும் இணைப்புச் சாலை கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாதபடி இருந்து வருகிறது. மேலும், மழைக்காலங்களில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் சென்று வருகிறார்கள்.   மேலும், விவசாயிகள் தங்களது விவசாயப் பொருள்களை இந்த சாலை வழியாக மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பாரமரிப்புக்காக பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதாக தவளகிரி நகர், வேலன் நகர், தீரன்நகர், சிவியார்பாளையம், வடக்குத்தோட்டம், அத்தாணிசாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் புறக்கணிப்பு குறித்த பேனர்களை சிவியார்பாளையம், அத்தாணி சாலையில் வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

Category

🗞
News
Comments

Recommended