சென்னை: ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகின. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 இடங்களை தவெக கைப்பற்றியது. அதன்படி, நட்சத்திர தொகுதியான மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார்.அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்ட அவர் அளித்த பேட்டியில், ” வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றிக்கு உழைத்த தவெக தொண்டர்களுக்கு நன்றி. மக்களை எளிதாகச் சந்திப்பவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இரண்டு பேரையும் மக்கள் எளிதில் சந்திக்க முடியாது. இந்தத் தொகுதியில் வீடு ஒதுக்கும் பிரச்சனை பெரிதாக ஒன்றும் இல்லை. லஞ்சம் வாங்காமல் மக்களுக்கு வீட்டினை ஒதுக்கினால், அவர்கள் அங்குக் குடியேறியிருப்பார்கள். ஊழல் இல்லாத அரசை தவெக அளிக்கும்” எனத் தெரிவித்தார்.
Comments