வேலூர்: காட்பாடி அருகே வாகன சோதனையின் போது ஆவணங்களின்றி கொண்டு வந்த ₹5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகிலுள்ள பொன்னை நான்கு ரோடு பகுதியில், நிலை கண்காணிப்பு குழு அதிகாரி லட்சுமி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து பெங்களூர் நோக்கி பயணித்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, காரில் பயணம் செய்த லோகேஷ் என்பவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ₹5 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் செட்டி தாங்கள் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் பாபு என்பது தெரியவந்தது. பின்னர் அந்தப் பணம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments