Skip to playerSkip to main content
  • 8 hours ago
தூத்துக்குடி: தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரே தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 12 மணியளவில் தூத்துக்குடியில் உள்ள தலைமை அஞ்சலகத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மதுரை கோட்ட தலைமை அஞ்சலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, மதுரை அலுவலகத்தில் இருந்து தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், தலைமை அஞ்சலகத்தில் இருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேற்றினர். தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் தீவிரமாக சோதனை நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய்யான தகவல் என்று தெரிய வந்தது. இந்த வெடிகுண்டு சோதனை காரணமாக சுமார் 2 மணி நேரம் தலைமை அஞ்சலகத்தில் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

Category

🗞
News
Transcript
00:05I don't know where I am going
00:06Yeah, I'm going to go
00:14It's so good
00:16Don't you say anything?
00:20What's wrong with me?
00:21I'm not going to go
00:22I'm not going to go
00:24We're going to go
00:25We're going to go
00:33We are going to get involved in the fight.
00:43We are going to get a chance.
00:50We are going to go to the fight.
00:51We are going to go to the fight.
00:52We are going to get the fight.
01:27Oh
Comments

Recommended