திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உழவர் சந்தை பாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உழவர் சந்தை மற்றும் அதன் அருகே தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 5 கோடி ரூபாய் செலவில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்காக புதிய கடைகள் கட்டி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி மார்கெட் வியாபாரிகள், உழவர் சந்தைக்கு செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், உழவர் சந்தைக்கு விவசாயிகளால் காய்கறிகளை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், உழவர் சந்தைக்கு கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
Comments