Skip to playerSkip to main content
  • 9 minutes ago
தேனி: தேர்தல் பரப்புரையின் போது பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனி உழவர் சந்தை பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக வருகை தந்த அமமுக வேட்பாளர் கதிர்காமு அந்தப் பகுதியில் இருந்த டீக்கடைக்குள் சென்று தானே டீ போட்டு பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார்.அதனைத் தொடர்ந்து உழவர் சந்தை பகுதிக்குள் சென்று அங்கு காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே துண்டு பிரசுரங்களை வழங்கி தனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் உழவர் சந்தைகளில் அருகே சாலையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை பார்த்து அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Category

🗞
News
Transcript
00:00Thank you
00:44Thank you
01:15Thank you
01:39Thank you
02:06Thank you
Comments

Recommended