Skip to playerSkip to main content
  • 6 hours ago
தஞ்சாவூர்: நடிகர் விஜய் அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என  நடிகர் சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சைத்ரா ஆச்சார் ஆகியோர் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் மக்களுடன் படத்தை பார்ப்பதற்காக தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கிற்கு வந்தனர். அங்கு பொதுமக்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்த்தனர்.பின்னர், நடிகர் சசிகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மக்களோடு மக்களாக இருந்து படத்தை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து படத்தை பார்க்கிறார்கள். நல்ல சினிமா கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்து இருக்கிறது. மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த மக்களுக்கு நன்றி" என்றார்.அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகம் படம் மறு தணிக்கைக்கு சென்று இருப்பது சந்தோஷம் தான். சினிமாவில் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தும், அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து இருக்கிறார். அவரது தனிப்பட்ட விருப்பம் அது. அவர் அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும்" என்று கூறினார்.

Category

🗞
News
Comments

Recommended