Skip to playerSkip to main content
  • 14 minutes ago
காஞ்சிபுரம்: உலகப்புகழ் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சாமி தரிசனம் செய்தார்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காஞ்சிபுரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு இன்று வருகை தந்து சுாமி தரிசனம் செய்தார்.மகாசக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழும் இக்கோயிலுக்குத் தனது மனைவியுடன் வருகை தந்த ஆளுநருக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் தம்பதியர் காமாட்சி அம்மனை மனமுருகி வழிபட்டனர். தரிசனத்திற்குப் பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.அத்துடன் காஞ்சி காமாட்சி அம்மனின் திருவுருவப்படம் மற்றும் சங்கர மட பீடாதிபதிகளின் திருவுருவப்படங்களையும் அவர்கள் ஆளுநருக்கு நினைவுப் பரிசாக வழங்கினர். இந்த நிகழ்வின்போது காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தலைவர் சேது ராமச்சந்திரன் உடனிருந்தார். சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் கோயிலில் உள்ள பேட்டரி காரில் அமர்ந்து, ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்தார். அப்போது கோயிலின் கட்டிடக்கலை மற்றும் சிறப்புகளைக் கேட்டறிந்த அவர், மீண்டும் ஒருமுறை அம்மனை தரிசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
00:39Thank you very much.
Comments

Recommended