Skip to playerSkip to main content
  • 14 years ago
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
சோலை எல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்பு
பாவி மகன் உன் நினைப்பு

வெள்ளியில தீப்பெட்டியாம் மச்சானுக்கு
விதவிதமா பீடி கட்டாம்
வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன்
சம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்

ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்

கழனி சேத்துக்குள்ள களை எடுத்து நிக்கையில
உன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையில
களைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரே

கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெல்லாம்
உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே
ஊருணி கரையோரம் உக்கார்ந்து பேசினமே
ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே

சும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேந்திருக்கான் வம்பு பண்ண காத்திருக்கான்....

(இறுதி 2அடிகள் இணைக்க முடியாமல் போய்விட்டது)

Category

🎵
Music
Be the first to comment
Add your comment

Recommended