திருவாரூர்: கல்லூரி மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் பகுதியில் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழ் துறையில் பயின்று வரும் மாணவிகள் கல்லூரியில் ஒத்திகை பார்க்கும் நிகழ்வில் ஈடுபட்டனர்.அப்போது அதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி உள்ளனர். மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாணவிகள் பீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் குடிப்பதும் அவர்களுக்குள் குடித்துவிட்டு மயங்கி விடக் கூடாது ஒழுங்காக ஆட வேண்டும் என்று பேசிக் கொள்வதுமாக ஒரு நிமிடத்திற்கு காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து கல்லுரி முதல்வருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முற்பட்டபோது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
Comments