Skip to playerSkip to main content
  • 2 days ago
திருவள்ளூர்: வீட்டிற்குள் திடீரென புகுந்த 5 அடி நீள சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். பெயிண்ட் தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அவரது வீட்டிற்குள் செல்வதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வெளியே நின்றபடியே பாம்பு நுழைவதாக கூச்சலிட்டார்.இந்த சத்தம் கேட்டு கணவரும் மனைவியும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பரசுராமன் தலைமையிலான குழுவினர் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் வீட்டின் மாடிப் படியின் கீழ் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து சாக்குப் பையில் அடைந்து வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் கணவன் மனைவி அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. 5 அடி நீளம் கொண்ட பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you for joining us.
Comments

Recommended