Skip to playerSkip to main content
  • 12 minutes ago
தூத்துக்குடி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு வழக்கமாக சுமார் 1,500 இலை கட்டுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாமல் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் மூன்றில் ஒரு பங்கு வாழை இலை கட்டுகள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.மேலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாழைத்தார்கள் விளைச்சலும் குறைவாக இருப்பதால் காய்கறி சந்தைக்கு வாழைத்தார்கள் வரத்து மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால் தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன.வழக்கமாக 1500 ரூபாய் வரை விற்பனையாகும் வாழைத்தார்கள், இன்று சுமார் 3500 முதல் 4000 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோன்று நாட்டு வாழைத்தார் 1000 ரூபாய் முதல் விற்பனையானது. இந்த விலை உயர்வானது மழை பெய்து விளைச்சல் அதிகரித்தால் தான் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Category

🗞
News
Transcript
00:02I
Comments

Recommended