Skip to playerSkip to main content
  • 18 hours ago
தூத்துக்குடி: தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப் பயறு உள்ளிட்ட மானாவரி பயிர்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் மக்காச்சோள பயிர்கள் ஒரு குவிண்டால் 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட 300 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Category

🗞
News
Transcript
00:03This video is brought to you by S.T.A.L.A.
Comments

Recommended