ராணிப்பேட்டை: புலிவலம் கிராமத்தில் ஸ்ரீ குகன் வேல்மாறல் ஆலய கட்டுமானத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதுராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கமல கருங்காலி வாராகி அம்மன் திருக்கோயிலில், ஸ்ரீ குகன் வேல்மாறல் ஆலய கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வை முன்னிட்டு கமல கருங்காலி வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு, கலச பூஜை, 108 வகை மூலிகைகள் கொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு பூர்ணாஹுதி நிகழ்த்தப்பட்டது.மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க கலச புறப்பாடு நடைபெற்றது.பின்னர் ஸ்ரீ ராஜேந்திர சுவாமிகள் தலைமையில், ஸ்ரீ குகன் வேல்மாறல் ஆலய கட்டுமானத்திற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. பூஜை செய்யப்பட்ட கலசத்தின் புனிதத்துடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 9 அடி உயரமுள்ள வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூர தீப ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புலிவலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Comments