வேலூர்: அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் உள்ள வீரர்கள் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள மேலாண்மை மையத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது அங்குள்ள வீரர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடி கொண்டாடினர். அரக்கோணம் மேலாண்மை மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சீனியர் கமாண்டண்ட் சுனில் தலைமையில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பண்டிகையை வரவேற்கும் விதமாக, அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடி பூசி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சீனியர் கமாண்டண்ட் சுனில், வீரர்களுக்கு வண்ணப் பொடி பூசி ஹோலி நல்வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது சைலேந்திர சிங் மற்றும் சங்கேத் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பிற்காக ஓய்வின்றி பணியாற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், தங்கள் பணி நெருக்கடிகளுக்கு இடையே இவ்வாறான பண்டிகை மற்றும் கொண்டாட்டங்கள் மூலம் உற்சாகத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
Comments