Skip to playerSkip to main content
  • 5 days ago
அரியலூர்: சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிக்கு தமிழக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி முதல் அஸ்தினாபுரம் வரை உள்ள சாலை, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் இருவழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த பணியை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சிமெண்டு நிறுவனங்கள் மற்றும் கனிம சுரங்கங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் கனரக வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைத்து பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பணிகளை தரமாகவும் துரிதமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர் நடராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் இளையராஜன், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த சாலை விரிவாக்கப் பணி, அரியலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து பொதுமக்களுக்கு அதிக வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Category

🗞
News
Transcript
00:07To be continued...
00:42To be continued...
Comments

Recommended