Skip to playerSkip to main content
  • 7 minutes ago
சிவகங்கை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் என்டிஏ கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியனை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் பிடித்த வேட்பாளருக்காக அல்ல, ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். காரைக்குடியை சேர்ந்த ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் உயர்ந்த பதவிகளில் இருந்தும் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை" என்றார்.திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், “காங்கிரசுக்கு கூடுதலாக மூன்று தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பது, திமுக காங்கிரசுக்கு அடிமை என்பதை காட்டுகிறது. ராகுல் காந்தி ஆரோக்கியமான அரசியல் நடத்தவில்லை. கச்சத்தீவு மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற பிரச்சனைகளில் காங்கிரஸ் எடுத்த முடிவுகளுக்கு, பாஜக பழி சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அண்ணாமலை, கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Category

🗞
News
Transcript
00:00The government has
00:01combined with the government's jobs in the U.S.
00:06States, 90% of the government has begun toardly
00:12the government's project is the best
00:18government's project in the U.S.
Comments

Recommended