Skip to playerSkip to main content
  • 6 weeks ago
திருவள்ளூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் பரப்புரையைத் திருத்தணியில் இருந்து தொடங்கினார்.தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி, பாமக ராமதாஸ் - வி.கே சசிகலா கூட்டணி என 5 முனைப் போட்டிகளுக்கு தமிழ்நாடு தேர்தல் களம் தயாராகி வருகிறது.இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கமலா திரையரங்கம் அருகே வாகன பரப்புரையைத் தொடங்கினர். தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரப்புரையை மேற்கொண்ட அவர், இன்று 24ஆம் தேதி வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை நடத்த உள்ளார்.அதேபோல, மார்ச் 25 ஆம் தேதி கிருஷ்ணகிரி, 26-ஆம் தேதி சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி, 27-ஆம் தேதி திருவண்ணாமலை, 28-ஆம் தேதி காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை சீமான் மேற்கொள்கிறார்.இதனைத் தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, ஆவடி ஆகிய தொகுதிகளில் தேர்தல் பரப்புரையை சீமான் மேற்கொள்கிறார்.

Category

🗞
News
Transcript
00:25Thank you for joining us.
Comments

Recommended