Skip to playerSkip to main content
  • 1 day ago
திருநெல்வேலி: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், அதன் எதிரொலியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வந்த பல உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட உணவகங்கள், டீ கடைகள் மற்றும் பேக்கரிகள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் அதிகமாக இந்த உணவகங்களையே நம்பி உணவு வாங்கி வந்தனர். இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு காரணமாக அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.  சமையல் எரிவாயு இல்லாததால் உணவு தயாரிக்க முடியாமல் இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் உணவு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் விநியோகம் சீராக நடைபெற வேண்டும் என பொதுமக்களும் உணவக உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you
00:38Thank you
Comments

Recommended