Skip to playerSkip to main content
  • 20 hours ago
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே காங்கேயங்குறிச்சி ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காங்கேயங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது.‌ இக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோபூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்று கோயிலை வலம் வந்தது.பின்னர் கோயில் ராஜகோபுரம் விமானக் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி புனிதநீரை ஊற்றினர். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். இதேபோன்று செல்வ விநாயகர், நாச்சியார் அம்மன், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு எல்லை பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் காங்கேயங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், கிராம நாட்டார்மைகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
Comments

Recommended