Skip to playerSkip to main content
  • 2 days ago
வேலூர்: காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் காதலர்களுக்கு அனுமதி இல்லாததால் இளம் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாய் அனுசரிக்கப்படும் இந்த நாள், காதலை வெளிப்படுத்தவும், உறவுகளை வலுப்படுத்தவும் ஒரு சிறப்பான நாளாக கருதப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட பரிசுகளை பரிமாறிக் கொண்டு தங்களது பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் ஜோடிகள் காதலர் தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் கோட்டை எதிரில் ரோஜா மலர்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. சிவப்பு ரோஜாக்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. காதலர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த மலர்களை வாங்கி மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்கின்றனர். இதனால் மலர் வியாபாரிகளும் இன்று அதிக விற்பனை நடைபெறுவதால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.மேலும், சுற்றுலா தலமாகப் பிரபலமான வேலூர் கோட்டை, புதிய பேருந்து நிலையம், காட்பாடி ரயில் நிலையம், பெரியார் பூங்கா பகுதியில் காதலர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் காதலர்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சில இளம் ஜோடிகள் ஏமாற்றமடைந்தாலும், நகரின் பிற பகுதிகளில் காதலர் தினக் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. காதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த நாள், அன்பும் புரிதலும் நிறைந்த உறவுகளை உருவாக்கும் நாளாகவும் நினைவுகூரப்படுகிறது.

Category

🗞
News
Transcript
00:20Let's get started.
Comments

Recommended