தேனி: கம்பத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 66 வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு 66 வது ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன.இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் சாலையில் இருபுறமும் நின்று ஆரவாரம் செய்தனர். இந்த மாட்டு வண்டி பந்தயம் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 100 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.இந்த போட்டியானது கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு சாலையில் சுமார் 8 கிலோ மீட்டார் தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Be the first to comment