தூத்துக்குடி: மாசிலாமணிபுரம் சந்தன மாரியம்மன் திருக்கோயில் முன்பு 2500 வரிதாரர்கள் இணைந்து வைத்துள்ள 'எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை! ஜனநாயகத்திகே' என்ற பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாநகர், மாசிலாமணிபுரத்தில் 1953ல் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 2500 வரிகாரர்கள் சேர்ந்து கோயில் முன்பு எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை. ஓட்டு என்னும் மூலப்பொருளை கேட்டு வரும் அன்பர்களே! தொழிலதிபர்களே! எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காசி விநாயகர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் வரிதாரர்கள், மெம்பர்கள், பக்தர்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை ஜனநாயகத்திற்கே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துள்ளனர்.இதுகுறித்து, கோயில் தர்மகர்த்தா சுப்பையா, கௌரவ தர்மகர்த்தா செம்புலிங்கம், பொருளாளர் சுடலைமணி மற்றும் கௌரவ ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் கோயிலில் உள்ள 2500 வரிதாரர்கள் அவர்கள் விருப்பப்படி ஜனநாயகத்திற்கு மட்டுமே வாக்களிப்பார்கள். தவிர ஓட்டை விற்க மாட்டோம். ஜனநாயகத்திற்கும் நல்லவர்களுக்கும் எங்கள் ஓட்டை அளிப்போம் என முடிவு செய்து எங்களது கோயில் முன்பு அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த பதாகை வைத்துள்ளோம்" என தெரிவித்தனர்.
Comments