தஞ்சாவூர்: பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் பொதுமக்களுக்கு பருத்திபால் வழங்கி வாக்கு சேகரித்தார்.தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பருத்திப்பாலை வாங்கி பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார்.அதனைத் தொடர்ந்து, தஞ்சை ரயில் நிலையம் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.அப்போது எம்ஜிஆர் சிலை முன்பு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளின் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்று கொண்டிருந்தனர். இபிஎஸ் பிரச்சாரம் முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பிரச்சார ஆடியோ பாடல் ஸ்பீக்கரில் ஒலித்தபோது உணர்ச்சிவசப்பட்டு மேடையில் இருந்த ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் துண்டை சுழற்றி பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினார்.
Comments