Skip to playerSkip to main content
  • 6 weeks ago
சென்னை: ஆவடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முனைவர் புனிதா சண்முகம் தமது தொகுதியில் தீவிர பிரச்சாபம் மேற்கொண்டு வருகிறார்.தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் பெண் வேட்பாளர் முனைவர் புனிதா சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆவடி தொகுதிக்குட்பட்ட தண்டுரை மீன் சந்தை, ஆவடி சந்தை, திருமுல்லைவாயல் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் ஆலயம், ஆவடி தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் ஆவடி சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் பரப்புரை செய்து வருகிறார். பிரதான கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரது கவனம் பெற்று வருகின்றனர்.

Category

🗞
News
Comments

Recommended