Skip to playerSkip to main content
  • 21 minutes ago
நீலகிரி: நாய் விரட்டியதால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை கண்டு, பெண் ஒருவர் நூலிழையில் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதி என்பதால், யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை, உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.குறிப்பாக, குன்னூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு தேடி பகல் நேரங்களிலேயே உலா வரும் கரடியால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற சூழலில், குன்னூர் அருகே கரடி பள்ளம் கிராமத்தில் கரடி ஒன்று உலா வருவதைக் கண்ட வளர்ப்பு நாள், சத்தமிட்டுக் குரைத்துள்ளது.மேலும், நாய் சத்தமிட்டு விரட்டியதால் நாயிடமிருந்து தப்பிக்கக் கரடியும் மின்னல் வேகத்தில் ஓடியது. நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண் ஒருவர், கரடி ஓடி வருவதைப் பார்த்து அலறியடித்து வீட்டிற்குள் சென்று தப்பினார். கரடியிடம் இருந்து அப்பெண் தப்பிக்கும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.உலா வரும் கரடியை வனத் துறையினர் உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், “பகல் நேரத்தில் உலா வரும் கரடிகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரடி நடமாட்டம் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டால், இப்பகுதியில் கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

Category

🗞
News
Comments

Recommended