Skip to playerSkip to main content
  • 9 minutes ago
கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிகுளம் கன்னிமாரா தேக்கு என்னுமிடத்தில் அருகே இரண்டு யானைகள் சண்டையிடும் காட்சியை சுற்றுலா பயணிகள் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப், பரம்பிக்குளம் போன்ற வனப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. அங்கு காட்டெருமை, பன்றி, புள்ளிமான், வரையாடு, காட்டு மாடு,  காட்டு யானை, கரடி, சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளை காண்பதற்காக தமிழக-கேரள வனத் துறையினர் ஜீப், வேன் சவாரி மூலம் கட்டணங்கள் வசூலித்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் கேரளா வனத்துறை சுற்றுலாப் பயணிகளை ஜீப் சவாரியில் அழைத்துச் சென்ற போது பரம்பிக்குளம் அருகே கன்னிமாரா தேக்கு செல்லும் வழியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Category

🗞
News
Transcript
00:27This is a production of WGBH.
Comments

Recommended