Skip to playerSkip to main content
  • 3 months ago
தேனி: இடுக்கியில் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் எதிரே வந்த ஒரு கார் மற்றும் ஒரு பைக் மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக-கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் கொட்டாரக்கரா - முண்டக்காயம் தேசிய நெடுஞ்சாலையில் 35ஆம் மைல் மருதும் மூடு அருகே நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சங்கனாச்சேரியில் இருந்து மைதா மாவு ஏற்றிக் கொண்டு குமுளி வந்த பிக்கப் வேன் கட்டுப்பாட்டை இழந்து, பெருவந்தனத்தில் இருந்து வந்த ஒரு பைக் மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளது.தொடர்ந்து சாலையோர தடுப்பு வேலியை உடைத்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த மூன்று பேர், நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து, அவர்களை முண்டக்காயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முண்டக்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Category

🗞
News
Comments

Recommended