அரியலூர்: ஜப்பானை சேர்ந்த சிந்தோ மதகுரு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் வழிபாடு செய்தார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கை கொண்ட சோழபுரம். இங்குள்ள பிரகதீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது. இங்கு உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பயணிகள் இங்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.இந்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த மிகவும் பழமையான சிந்தோ மதத்தை சேர்ந்த மதகுரு கோகான் மருஹிக்கோ, இன்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயிலில் உள்ள சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று ஜப்பான் மதகுரு வழிபாடு நடத்தினார். இவர் இயற்கையே இறைவன் என்ற கோட்பாட்டின் படி பஞ்சபூத சிவ தலங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு செய்த பின்னர் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் குறித்து அறிந்து அங்கு வந்து வழிபாடு நடத்தினார்.
Comments