Skip to playerSkip to main content
  • 13 minutes ago
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தின் காவல் தெய்வம் என கருதப்படும் கோனியம்மன் திருக்கோயிலின் தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. கோவை மாநகரின் மிக முக்கியமான பகுதிகளான டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட சாலைகளில் இந்த தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு மாநகரில் 2000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு கோவை மாநகர் பகுதியில் அமைந்துள்ள பத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.மதியம் 2 மணி அளவில் தொடங்கிய தேரோட்டமானது மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதனால் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கடைவீதி உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்திருந்தனர். தேரோட்டத்தின் போது கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மேள இசைக்கு ஏற்ப நடனமாடியபடி வந்தனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
00:36Thank you very much.
Comments

Recommended