ஈரோடு: கேர்மாளம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் வேரில் சிக்கி தவித்த சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1455 சதுர கிமீ பரப்பளவு கொண்ட வனப் பகுதியாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மத்தியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் அடர்ந்த காடாக இருப்பதால் வனவிலங்குகள் சாலையோரம் உலா வருவதை காணமுடியும். யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள், செந்நாய்கள், கழுதைப்புலி என அரிய வகை விலங்குகள் உள்ளன. இந்த நிலையில், இந்த நிலையில் ஆசனூர் மலைப் பகுதியில் இருந்து கேர்மாளம் செல்லும் வனப்பகுதி சாலையில் ஒரு சிறுத்தை அவ்வப்போது பகல் நேரங்களில் நடமாடுகிறது. கேர்மாளம் வனச்சாலையில் பயணிகள் பேருந்தில் சென்ற போது அங்குள்ள ஒரு சாலை வளைவு அருகே பள்ளத்தாக்கில் சிறுத்தை மரங்களின் வேர்களில் சிக்கி மேலே ஏற முடியாமல் தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை முட்டி மோதி வேர்களின் வழியாக மெதுவாக மேலே மரத்தின் மீது ஏற முயற்சித்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Comments