ஈரோடு: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை சுமார் 2 மணி நேரம் தூறல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெயில் சதம் அடித்துள்ளது. 1,432 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செடி கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. பசுமையான இயற்கை சூழல் மாறி காய்ந்த மரங்களை காணமுடிகிறது. குளம், குட்டைகள் வறண்டு சேறும் சகதியுமாக உள்ளன.யானைகள் தண்ணீர் தேடி வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுவது அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது. இதற்கிடையே சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் 100 டிகிரியை எட்டி வருகிறது. கடும் வெயிலால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் சத்தியமங்கலம், கடம்பூர், குன்றி மலைப்பகுதியில் இன்று அதிகாலை மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
Comments